சனி, 20 ஜூன், 2015

தொலைந்தே போகிறேன்

கவி என நினைத்து
கவி பல எழுதி
தள்ளுகிறேன்,
வறுமை சூழ
விக்கித்து நின்ற
பொழுதிலிருந்து..


**
மீண்டும் துவக்க
புள்ளியில்
நிற்கிறேன்.

காலம் ஒரு
அசத்தலான
கடவுள்..


**
தரித்திரம் சூழ்ந்தது,
இரக்கம் கொண்டவனிடத்தில்..


**
அமைதியாய் ஒரு
வாழ்க்கை அமைந்த
பின்னே,
கடவுள் மீது
கவனம்..


**
எதுவுமற்று
யாருமற்று..
வேறொன்றுமில்லை..


**
தொலைந்தே போகிறேன்..
கரிய வானம்
இருண்டு போகட்டும்.


**
எங்கே நகர்கிறது,
அல்லது
நகர்கிறோம் ??


**
மனது
கதறுகிறது.. 


நிசப்தமாய்
நகர்ந்தது
வானம்..


கற்றல் உணர்ந்தேன்.

சில நாட்களாய்
என் பகலும்
இரவும்
அசைவற்று
கிடக்கின்றன.


**
என் அடர்ந்த
மௌனத்தின் பின்னே,
புதைந்திருக்கிறது
ஆழ்மன ரகசியங்கள்..


**
கடல்..
பேரிரைச்சலோடு,
கனத்த மௌனமும்
சேர்த்து
என்னுள் எதையோ,
எடுத்துரைக்க முயல்கிறது.


**
தேவையற்று போனதாய்
நினைத்த வினாடியில்,
இருந்து,
உற்சாகம் கொண்டேன்..


**
ஒவ்வொன்றாய்
இழந்தேன்.

கற்றல் உணர்ந்தேன்..
 

**
சில இடைவெளிக்கு பிறகு,
ஒவ்வொரு முறையும்
உருமாறித்தான்
போகிறேன்..


**
எனக்கான காலம்
ஒன்று
கனவுகளில்
ஆர்ப்பரிக்கிறது..


**
எழுதுகிறேன்,
வான வீதியில்
உலவி கொண்டே..


**
நகர நகர
பழக்கமானது

 நரகம்