சனி, 20 ஜூன், 2015

தொலைந்தே போகிறேன்

கவி என நினைத்து
கவி பல எழுதி
தள்ளுகிறேன்,
வறுமை சூழ
விக்கித்து நின்ற
பொழுதிலிருந்து..


**
மீண்டும் துவக்க
புள்ளியில்
நிற்கிறேன்.

காலம் ஒரு
அசத்தலான
கடவுள்..


**
தரித்திரம் சூழ்ந்தது,
இரக்கம் கொண்டவனிடத்தில்..


**
அமைதியாய் ஒரு
வாழ்க்கை அமைந்த
பின்னே,
கடவுள் மீது
கவனம்..


**
எதுவுமற்று
யாருமற்று..
வேறொன்றுமில்லை..


**
தொலைந்தே போகிறேன்..
கரிய வானம்
இருண்டு போகட்டும்.


**
எங்கே நகர்கிறது,
அல்லது
நகர்கிறோம் ??


**
மனது
கதறுகிறது.. 


நிசப்தமாய்
நகர்ந்தது
வானம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக