வியாழன், 24 ஜூலை, 2014

ரசனை


ரசனைகள் அற்ற மனிதன்,
எங்குமில்லை..

எனக்குள் இருக்கும்
சின்ன சின்ன ரசனைகள்,
என் இடர் பயணத்தை,
சற்றே ஆசுவாசப்படுத்தி,
கொள்கின்றன..

அப்படி,
இங்கே என் ரசனைகளில்,
சில..  
*****************************
இருள் பிரியா அதிகாலையின்,
நிசப்த சாலைகளில்,
என் நடை பயணம் இதம்..

மலை பாதையில்,
மழை சாரலில்,
தோழியின் கரம் பற்றி,
திரிதல் பிடிக்கும்..

சாலையோர தேநீர் கடைகளில்,
சுடசுட தேநீரோடு,
செய்திகள் படிக்க,
பிடிக்கும்..

என்னை பரவசத்தில்,
ஆழ்த்துபவை,
விரிந்த வானமும்,
பச்சை பள்ளத்தாக்கும்...

எனக்குள் ஒரு உரையாடலை,
நிகழ்த்தி கொண்டே,
கற்பனை வீதியில்,
இரவு நேர பயணம் பிடிக்கும்...

காதல் பொழுதுகளில்,
அவள் என் தோள் சாய்ந்து,
பேசும் காதல் வினாடிகள்,
நிரம்ப பிடிக்கும்...

மனம் நிறைய கேள்விகளை,
சுமந்து நிற்கும்,
மழலைக்கு பதில் சொல்ல,
பிடிக்கும்...

பேரன்பு பேசி,
இந்த தேசத்தில் குறுக்கும்,
நெடுக்குமாய்,
பயணிக்க பிடிக்கும்..

கனவுகள் பிடிக்கும்,
அதில் கவிதை படித்தல்,
மிக பிடிக்கும்..

என் மரணம் அழகானது,
அமைதியானது என்று,
கற்பனை செய்வதில்,
அலாதி பிரியம்...

ஏனென்று தெரியாது,
ஏதற்கோ ஏக்கம் கொள்ளும்,
வினாடிகள் பிடிக்கும்...

நான்,
நானற்று திரிதல்,
மிக பிடிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக