புதன், 10 டிசம்பர், 2014

நீந்தி பெருங்கடலை கடந்த, பின்னே...


*
சிதைந்த மனது,
தேடுவது,
ஒரு ஆறுதலை..


*
வெகு காலம்,
கழிந்த ஒரு நாளில்,
அவளை சந்தித்தேன்..
மௌனங்கள் பேசி,
விடைபெற்றன மீண்டும்.

*
என்
இறுதி யாத்திரை,
அவள் பூத்தூவலில்,
சிறக்கும்

*
விரக்தி,
வீணடிக்கும்,
நாட்களை..

*
சிதைந்த மனது,
மீண்டு வருதல்,
மிக கடினம்,
என்றாலும்,
மீளத்தான் வேண்டும்

*
அதிகார மனிதர்கள்,
அநீதி இழைக்கிறார்கள்,
பாமரர் உலகிற்கு..

*
வறுமை தீண்ட,
துவங்குகையில்,
சமூகம்,
உறவுகள்,
வெறுப்புடன் பார்க்க,
துவங்கும்..

*
பேச தெரியவில்லையாதலால்,
வெற்றி கிட்டவில்லை..

*
ஒரு வழியாய்,
இளமை தீர,
துவங்கிய பொழுதில்,
மெல்ல,
தனித்து விடப்பட்டேன்..

*
அவசர தேவை,
ஓர் பேரமைதி..

*
நீந்தி
பெருங்கடலை கடந்த,
பின்னே,
முற்றும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக