வியாழன், 11 டிசம்பர், 2014

** மழை **


*
அடை மழையில்,
கரைந்து நனைகிறது,
வறுமை..

*
விடாது கொட்டி தீர்த்த,
மழைக்கு பலி,
ஏழை மக்கள்..

*
விடிய விடிய,
பெய்திட்ட மழையை,
ஒற்றை சன்னல் வழியே,
தனிமை சூழ,
வெறித்தேன்...

*
மழையில் நனைதல்,
பால்யத்தில் கொண்டாட்டம்,
இளமையில் தித்திப்பு,
இளமை தாண்டிய பின்,
துயரம்..

*
இளமை சூழ,
அன்று ரசித்த மழையை,
இன்று,
தனிமை சூழ,
வெறுத்தேன்..

*
அடர் வனத்தில்,
அடர்ந்த மழையில்,
நனைந்து
பிறிதொரு நாளில்
இறப்பேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக