சனி, 20 ஜூன், 2015

கற்றல் உணர்ந்தேன்.

சில நாட்களாய்
என் பகலும்
இரவும்
அசைவற்று
கிடக்கின்றன.


**
என் அடர்ந்த
மௌனத்தின் பின்னே,
புதைந்திருக்கிறது
ஆழ்மன ரகசியங்கள்..


**
கடல்..
பேரிரைச்சலோடு,
கனத்த மௌனமும்
சேர்த்து
என்னுள் எதையோ,
எடுத்துரைக்க முயல்கிறது.


**
தேவையற்று போனதாய்
நினைத்த வினாடியில்,
இருந்து,
உற்சாகம் கொண்டேன்..


**
ஒவ்வொன்றாய்
இழந்தேன்.

கற்றல் உணர்ந்தேன்..
 

**
சில இடைவெளிக்கு பிறகு,
ஒவ்வொரு முறையும்
உருமாறித்தான்
போகிறேன்..


**
எனக்கான காலம்
ஒன்று
கனவுகளில்
ஆர்ப்பரிக்கிறது..


**
எழுதுகிறேன்,
வான வீதியில்
உலவி கொண்டே..


**
நகர நகர
பழக்கமானது

 நரகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக