சனி, 2 ஆகஸ்ட், 2014

என் பயணம்


இந்த அழகிய உலகிற்குள் ,
என் பயணம் துவங்கி,
நீண்ட வருடங்களாகி,
விட்டது..

இன்னும் முற்று பெறாமல்,
தொடர்கிறது என் பயணம் .

என் தொடக்க காலத்து,
பயணங்களில்,
நான் பரவசத்தோடு,
ரசித்திருக்கிறேன்..

வியந்திருக்கிறேன்,
இந்த பூமியின் பேரழகை கண்டு..

எல்லாமே எனக்குள்,
ஆச்சரியத்தை விளைவித்தன..

நாட்கள் செல்ல, செல்ல,
பயணங்கள் தொடர தொடர,
மெல்ல சலிப்பொன்று,
உட்புக,
பயணம் ஏனோ,
கசந்தது..

போகிற போக்கில்,
நினைத்தவை யாவும்,
கைப்பற்றி விட்டால்,
இனிக்கும் பயணம்,
கைக்கு எட்டாததை நினைத்து,
துயரப்பட வைக்கிறது..

சற்றே ஓய்வு எடுத்து,
நிற்கிறேன்..

இந்த பயணம் என்னை,
எங்கு கொண்டு செல்லும்,
என்று தெரியும்..

அதை நான் உணர்ந்திருக்கிறேன்.
அதுவரை இந்த நீண்ட,
பயணம் சுலபமல்ல,
என்றும் தெரியும்..

உடன் பயணித்தவர்கள்,
ஒவ்வொருவராய் உதிர்ந்து கொண்டே வர,
புதிய பயணிகள்,
ஒவ்வொருவராய் அறிமுகமாக,
நான் தொடர்கிறேன் என் பயணத்தை,
என் உதிர்தல் நோக்கி..

சில கடமைகளுக்காக,
இன்னும் உதிராது,
இருக்கிறேன் போலும்..

நான் உதிர்ந்து போகாமல்,
இருக்கும்வரை,
உங்களோடு,
இணைந்திருக்கும் என்,
பயணம்..

என்னை இயக்குபவன்,
என்னை செலுத்தி கொண்டிருப்பவன்,
யாரோ,
அவனுக்கு என் நன்றி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக