சனி, 2 ஆகஸ்ட், 2014

விதவிதமாய் மனது..


**
விதவிதமாய் மனது.. ஒரு தொகுப்பு **

சிறு தூறல்,
குளிர் இரவு,
ஆழ்ந்த நிசப்தம்,
அழகிய கவிதை
இதம்..

**
சில நேரங்களில்,
பிரபஞ்ச பெரு வெளியில்,
திரிகிறேன்..

மரணத்தின்,
ஒத்திகை.. ?!!

**
பிறிதொரு மழை,
நாளில்,
மரங்களடர்ந்த வனத்தில்,
சருகுகள் சூழ,
மரணித்து இருப்பேன்..

**
ஆழ்நிலை உறக்கம்,
என்றாவது,
ஒரு நாளில் எனக்கு,
கிடைக்கும் பொழுதில்,
மரணம் உணர்வேன்..

**
எக்காளமிட்டு,
சிரிக்க தயாராய்,
என்றும் சமூகம்..

**
என் வியர்வை,
என் மகிழ்வு..

சமூகம்
நகைத்தால்
எனக்கென்ன..

**
உற்சாகம் நீர்த்து,
போகையில்,
இளமை தீர்ந்து,
விடுகிறது.

**
சிறு மழைத்துளிகள்,
மெல்ல,
பெரு வெள்ளப் பிரவாகமாய்,
உருவெடுக்க,
கால் நனைத்த நதியில்,
முற்றிலுமாய் மரணித்து,
போயிருந்தேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக