சனி, 2 ஆகஸ்ட், 2014

உரையாடல்

இரவின்
இரண்டாவது ஜாமத்தில்
நின்றிருக்கிறேன்
தனித்து.

அடர் வனம் ஒன்றின்
மைய பகுதியில்
நின்று
வானம் பார்க்கிறேன்..

நீண்டு விரிந்த
நீள் வானம்
மிக அமைதியாய்
இருந்தது..

வானத்தின் சப்தம்
கேட்க முயற்சிக்கிறேன்..

நிசப்தம் தவிர
எதுவுமில்லை அங்கே..

கருமை பூசிய
வானில்
முழு நிலவின்
உபயத்தால்
ஆங்காங்கே மிக மெல்லிய
வெண்மை நிறத்தில்
மேக தீற்றல்கள்.

இடைப்பகுதிகளில்
கண்சிமிட்டும்
விண்மீன்கள் வெகு அழகாய்.

வெகு தொலைவில்
வானம்..
அதை தாண்டி
வெகு தொலைவில்
பிரபஞ்சம்.

நான் தனித்து
இங்கே பூமியில்
ஒரு வனத்தில்..

இனி ,
உரையாடல் துவங்கும்
எனக்கும்,
பிரபஞ்சத்தின் எங்கோ
ஒரு மறைவில் இருந்து,
இயங்கும்,
இறைவனுக்கும்..

இங்கே வானின் நிசப்தம்
வெகு அழகாய்
துணை நிற்கும்,
இறைவனோடு, உரையாடல்,
முற்று பெரும் வரை.

இங்கே மனிதர்கள்
விழிக்கும் முன்னே
முற்று பெற்றாக வேண்டும்
என்ற தவிப்பில்
அழகிய உரையாடலுக்கு
ஆயத்தமாகிறேன்
இறைவனுடன்..

2 கருத்துகள்:

  1. நிசப்தத்தின் உரையாடம் சப்தமாக ஒலிக்கிறது

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  2. நன்றி, சப்தம் குறைத்திட முயற்சிக்கிறேன்..

    பதிலளிநீக்கு