வியாழன், 11 செப்டம்பர், 2014

** என் மனதிலிருந்து சில வரிகள் **


வீழ துவங்கும்,
கணத்திலிருந்து,
தனிமை உடன் வர,
துவங்கும்..

*
பரிசு நிச்சயம்..

பிரிவு துயர் பரிசு,
காதலில்..

*
வானம் தாண்டி,
எங்கோ மறைந்திருக்கிறது,
சொர்க்கம்..

*
அதல பாதாளத்தில்,
வெப்பத்தின் மத்தியில்,
நரகம்..

**
புரட்சி வீரர்கள்,
எல்லாம் பாதியிலே,
மடிந்து போக,
சுயநல அரசியல்வாதிகள் ஆயுள்,
முழுவதும் பிழைக்கிறார்கள்..

**
இந்த காந்தி தேசத்தில்,
சமீபமாய்,
நீதியை விலைக்கு,
வாங்கும் முயற்சியில்,
அதிகார அசுரர்கள்..

**
உள்ளொன்று வைத்து,
புறமொன்று பேசினால்,
அது வஞ்சம் போர்த்திய நட்பு,
என பொருள்படும்..

**
பகுத்தறிவு என்பது,
பிறர் உள்ளம் உணர்வது..

*
பிறன் சூழல் கண்டு,
நகைக்காதே ,
உலகம் உருண்டை..

**
மனம் முழுதும்,
சாய் பகவானும்,
கந்த கடவுளும்...

இனி யாதொரு,
அச்சமும் எனக்கில்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக