திங்கள், 29 செப்டம்பர், 2014

** என் மனதிலிருந்து... **



*
கனவுகளில்,
உலா வருகின்றன,
மனதின் மத்தியில்,
இருக்கும்,
பிசாசுகள்..

*
அடர் இருளில்,
தொலை தூர,
நிசப்த வெளி ஒன்றில்,
தனித்து விடப்பட்டு,
இருக்கிறேன்..

நான் இதம்..

*
எல்லாம் இழந்த பின்னே,
பரிசாய்,
அடர் தனிமை..

*
அரசியலும்,
பெரு நிறுவனங்களும்,
கை கோர்த்தால்,
அது லாப வேட்டை,
அசுர கொள்ளை வெறி,
ஊழலின் உச்சம்..

*
இழப்பின் சுவடுகள்,
சுவர்களில்,
எதிரொலிக்கின்றன..

என் அறையெங்கும்,
துயர மனது..

*
பேச பிரியமாய்,
பேசிட யாருமற்று அந்திம தனிமை..

*
பெரிதாய் கனவுகள்,
நீர்த்து போகையில்,
தெளிந்து,
ஞானம் பெறுகிறான்,
தத்துவ மனிதன்..

*
ஆழ்ந்து,
உறங்குகையில்,
விடுபடவேண்டும்..

என் கனவுகள்,
பலிக்க,
இறைவன் துணை,
வேண்டும்..

**
காதலற்ற,
பெண் சிநேகமற்ற,
இளமை காலத்தை,
பரிசாய் தந்த,
இறைவனுக்கு நன்றி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக