புதன், 10 டிசம்பர், 2014

** மனது பேசுகிறது..**


ஒற்றை நிசப்த,
அறையை தாண்டி,
எங்கோ தொலைவில்,
ரீங்காரமிட்டு,
ஆடி பாடி மகிழ்கிறது,
இவன் மனது,
பின்னிரவு பொழுதுகளில்..

**
மரணம்,
என்றொரு இயற்கை,
அதிகார மனிதனின்,
ஆணவத்தை,
சற்றே குறைக்கிறது..

**
கனவுகள் தீர்ந்த,
பொழுதில்,
முற்றாய் விடிந்திருந்தது..

**
அவ்வப்போது,
சோழ தேசத்து,
இளவரசனாக,
புழுதி பறக்க,
புரவியில் விரைவேன்,
எங்கோ,
என் கனவுகளில்..

**
அறிந்தும்,
அறியாதது போல,
நடிப்பதற்கும்,
திறமை வேண்டும்..

*
வெற்று சுவற்றில் ,
இரவுகளின் தனிமை,
எதிரொலிக்கிறது.

*
எங்கோ தொலைவில்,
திரிகிறேன்..
அருகாமை ,
வசப்படும் பிறகொரு,
நாளில்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக