புதன், 10 டிசம்பர், 2014

** என்னிலிருந்து.. சில வரிகள்

*
மெல்ல தொலைந்தது,
அழகிய ஓவியங்கள்..
கீழ்வானம் இருண்டது..

*
விரக்தி மனதில்,
அவ்வப்போது,
அழகிய கனவுகள்..

*
சுடும் பாலை,
ஒன்றின் மீது,
வெற்று காலில்,
எங்கோ பயணம்..

*
எதிர்பாரா ஒரு கணத்தில்,
தொடரும் பயணம்,
முற்றும்..

*
தொடர்ந்த பழி சொற்கள்,
சுமக்கிறான்,
மிகுந்த நல்லவன்..

*
காதல் என்றொரு
மாயை ,
இளமை தீர்கையில்,
விலகி செல்கிறது.

*
தீரா சுமையில்,
அழகிய நட்பு
புலப்படும்..

*
பிறிதொரு நாளில்,
செல்வம் நிறைய,
சேர்த்த பின்னே,
இந்த மாபெரும் தேசத்தை,
குறுக்கும் நெடுக்குமாய்,
ஆசை தீர சுற்றி
வருவேன்..

*
சடசடவென,
சரிந்து விழுந்தது,
நூற்றாண்டு பல கண்ட,
பெரும் மரம் ஒன்று..
சூறாவளி,
வலியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக