புதன், 10 டிசம்பர், 2014

வெள்ள சிதறல்கள்..

ஆற்றங்கரையோரம்,
வழிந்தோடுகிறது,
வெள்ள சிதறல்கள்..


*
வெப்பம் தீண்ட,
துவங்கிய பொழுதில்,
அச்சம் குடி,
கொண்டது..

*
உணர்விழந்த நிலையில்,
நிசப்த உறக்கம்,
அவ்வப்பொழுது..

*
கனவுகளை ஆழ,
புதைத்து,
நிதர்சனங்கள்
குடியேறி விடுகின்றன..

*
எதற்கோ எங்கோ,
விரையும் சர்ப்பம்,
கண்டு,
உயிர் உணர்கிறது,
மனது.

*
பனி படர்ந்த,
விடியலில்,
குளிர்ந்த குளத்தில்,
முழுக்கவே,
நனைந்து விடுகிறது..

*
ஒற்றை அறையின்,
ஒரு மூலையில்,
எங்கோ வெறித்தபடி,
நிதர்சன நாட்களை,
நகர்த்துகிறது, மனது..

*
சூழல் வெப்பத்தில்,
சிக்கி,
தகிக்கிறது,
சமீபமாய்..

*
எனக்கு நெருக்கமாய்,
என்னை விட்டு வெகு,
தூரமாய்,
அவ்வப்பொழுது,
வேடிக்கை காண்பிக்கிறது,
மனது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக