வியாழன், 11 டிசம்பர், 2014

சபிக்கப்பட்டவன்


சில நேரங்களில்,
விசித்திரமாய் தோன்றும்,
வானம் போல,
இந்த காதலும்..

எழுத எழுத,
தீராது காதல் வரிகள்,
தொடர்ந்து பிறப்பெடுத்து,
கொண்டே இருக்கின்றன..

இத்தனைக்கும்,
எழுதுபவன் காதல்,
தீண்டாதவனாய்,
இருந்தும் கூட..

எனக்கும் கூட,
வேடிக்கையாக இருக்கிறது,
பல சமயங்களில்,
என் காதல் வரிகளை,
நினைத்தால்..

இந்த பிறவியில்,
எனக்கு சபிக்க ப்பட்டது,
கற்பனை காதலே,
என்று முழுதாய்,
உணர்ந்து கொண்டேன்,
இளமை தீர்ந்த பின்னே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக