புதன், 10 டிசம்பர், 2014

வரிகள்..

எங்கு தொடங்கியதோ,
எவனுக்கும் தெரியாது..

எங்கு முடியுமோ,
அதுவும் தெரியாது..,

பிரபஞ்சம்,
ஒரு மாய புதிர்..

**

திருநாள் வரும்,
தொலைவில் இல்லை..
நம்பிக்கை,
மெல்ல என் வறட்சியின்,
மீது,
மழைத்துளி ஒன்றை,
தெளித்து செல்கிறது..


**
களவு போன,
இறந்த காலம்,
இனி,
கனவுகளில்,
தொலைந்து போகும்..

**
கவனமாக இருக்கிறேன்,
கவனம் சிதைந்த,
பிறகு..

**
நாளைய கனவுகள்,
இனித்தது,
அற்றை காதல்,
நாட்களில்..

**
விடைபெற்ற பின்னே,
கனவுகளில்,
கரைந்திடுவேன்..

**
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக