புதன், 23 ஜூலை, 2014

இவன்....



இவன்,
பிரபஞ்ச வெளியில்,
சூன்ய திசை,
நோக்கி பயணிப்பவன்..

இந்த புவியின்,
மீது என் பயணத்தில்,
இளமை என்றொரு
பருவத்தை முடித்து,
விட்டவன்..

இனி,
தொடரும் பயணத்தில்,
புவியின் எல்லை,
கடந்து,
பிரபஞ்ச வெளியின்,
சூன்யம் நோக்கி,
செல்ல இருப்பவன்.

என்
இதுநாள் வரையிலான,
பயணங்கள்,
என் பார்வைகள்,
என் எண்ணங்கள்,
என்று,
என் மனதுக்குள்,
உலவும் அனைத்தும்,
இங்கே கொட்டிவிட
துடிக்கிறேன்..

காரணம்,
இந்த புவியில்,
பொருளற்ற ஒருவன்,
இவன்..

பொருளற்றதால்,
தனித்து விடப்பட்டவன்.

எனவே,
என் மனதை,
இங்கே தெளிக்கிறேன்,
என் பயணத்தினூடே..

வாசியுங்கள்,
விருப்பமிருப்பின்,
அல்லது,
தனித்து விட்டு விடுங்கள்,
இங்கும்...

நான்,
தொலைந்து போகிறேன்..

நன்றி.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக