வெள்ளி, 25 ஜூலை, 2014

பிரிவுதிர் காலம்


** பிரிவுதிர் காலம் **

விட்டு விலகி,
சென்றாலும்,
நினைவுகள் விலகிடுமா,
பெண்ணே...

தீரா வலி ஒன்றை,
பரிசாய் தந்து,
சென்றுவிட்டாய் சலனமற்று...

**
பிரிந்தாலும் கூட,
என் கனவு உலகின்,
தேவதைதான்,
இன்னமும் நீ...

**
காலம் காலமாய்,
வலி சுமந்து கொண்டுதான்,
இருக்கிறார்கள்,
காதலன் என்ற ஆண்கள்..
இன்று, நானும் கூட..

**
இருளான பொழுதில்,
வெளிச்சம் தந்து,
பிறகு,
விடியல் நேரத்தில்,
இருள் தந்து மறைந்தது,
ஏனோ பெண்ணே..

**
இன்னமும்,
உன் நினைவுகளை,
சுமந்து திரிகிறேன்..
இந்த சுமை,
என் ஆயுள் தீரும் வரை,
தொடரும்..

**
அடுத்த பிறவி,
என்பது நிச்சயமில்லை.
இந்த பிறவியில்,
நான் கொடுத்து வைக்கவும் இல்லை.

**
பெண்ணே,
எங்கிருந்தாலும் வாழ்க..
இது,
என் மனதிலிருந்து,
வெளிப்பட்ட வார்த்தைகள்..

என் அந்திமம்,
வரையிலும்
இந்த வார்த்தைகள் ஒலிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக