வியாழன், 24 ஜூலை, 2014

வென்றாலும், வீழ்ந்தாலும் மகிழ்வே..

ஏதேதோ
கனவுகளை வளர்த்தபடி,
திரிகிறோம் இளமையில்...

கனவுகள் பலிக்கிறது,
சிலருக்கு..

பலருக்கு விரக்தி,
பரிசாய் கிடைக்கிறது..

கனவுகள் பலித்த பலர்,
விரக்தியை கேலி செய்வதுதான்,
உச்சகட்ட வருத்தம்,
அவமானம் எல்லாம்..

தெளிந்த நீரோடை,
போன்றொரு மனதை,
வைத்து கொண்டு,
இதையெல்லாம் கடப்பது,
சுலபம் அல்ல..

ஆனாலும்,
கடந்துதான் ஆக வேண்டும்.

என்ன ஒன்று,
சிலருக்கு விரைவில்,
ஞானம் கிடைத்து விடும்..

பலருக்கு,
இந்த விரக்தியின் சுவடில்,
இருந்து வெளிவரவே,
பல வருடங்கள் பிடிக்கும்...

என்னை பொறுத்தவரை,
இளமை தீர்த்துவிட்டேன்,
விரக்தியின் உச்சத்தில்..

இனி இழப்பதற்கும்,
இறப்பதற்கும் ஒன்றும்,
இல்லை..

மனம் மெல்ல,
தெளிந்து வருகிறது,
இப்போது..

இனி,
மீண்டும் ஒரு பெரு,
முயற்சியில்,
உயரம் நோக்கி...

இனி,
வென்றாலும்,
வீழ்ந்தாலும்
மகிழ்வே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக