புதன், 23 ஜூலை, 2014

கிறுக்கல் வரிகள்.. என்னிலிருந்து

** என்னிலிருந்து **

மெல்ல மெல்ல,
தீப்பற்றி எரிகிறது,
முன்னிரவு பொழுதுகளின்,
காதல்..

**
தொட்டு பார்க்க,
பேராசை..
மனிதன் தீட்டு,
என்பது போல,
பார்க்கிறது,
அந்த பேரழகு சிலை..

**
காதல் கனவுகளில்,
மெல்லிய இசைக்கு,
முதலிடம்..

**
மெல்ல வடிந்து போகிறது,
உற்சாகம்,
பால்யம் தீர்கையில்..

**
பட்டியலிட்டது குழந்தை,
தகப்பனிடம்,
பழங்களும்,
சாக்லெட்டுகளும்,
பொம்மைகளும்..

**
உனக்கு தெரியுமா,
நான் யாரென்று,
அல்லது,
நீ யாரென்று..

**
மனம் நிறைய,
கனவுகளோடு,
உற்சாகமாய்
உழைத்து திரிந்தவனை,
வீழ்த்தியது,
காதல்....

**
விதி விட்ட வழி,
அல்ல,
சோம்பல் விட்ட வழி,
பாதாளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக