வெள்ளி, 25 ஜூலை, 2014

நிஜம் பேசுகிறேன்


என் சமீப கணங்களில்,
தனிமை நிரம்பி,
வழிகிறது...

**
என்றோ சலசலத்து ஓடிய,
பெரும் ஆற்றின்
மத்தியில்,
வறண்ட கற்களின் மீது,
வெப்பமாய் என் மனது.

**
வெப்பம் வீசியது,
மதிய நேர கடற்கரையும்,
சுடு மணலும்,
இவன் மனம் உணர்ந்து..

**
தீரா பனிப்பொழிவில்,
சிக்கிய உணர்வில்,
இவன் காதல், அற்றை நாட்களில்..

**
பொய்யுரைத்த என்னை,
வெகு ஆழமாய்,
கண்ட என் தந்தை,
சொன்ன வார்த்தைகள்,
பிற்காலத்தில் பலித்தது..

ஆம்,
உருப்படாமல் நான்..

**
சின்ன சின்ன கனவுகள்,
பெரிதாய் வியாபித்து,
சீரற்று போனது,
என் வாழ்வியல்..

**
என்னால்,
யாருக்கும் சுமை,
இருந்திட கூடாதென்று,
நினைத்து வாழ்ந்து,
தீரா சுமையாகி போனேன்,
என் குடும்பத்திற்கு..

**
அடுத்த மாதத்தில்,
நான் இறந்து போனாலும்,
போவேன்..

நிகழ்வுகள் பயமுறுத்துகின்றன..

**
வீழ வீழ,
மெல்ல தனித்து விடப்பட்டேன்.

**
அவ்வப்போது,
என் நினைவுகளில் அவள்,
வருவாள்..

என் குழந்தை,
என் நினைவுகளை கலைத்து,
விடுகிறான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக