புதன், 23 ஜூலை, 2014

மன்னித்து விடுங்கள்

சட்டென்று,
ஏதாவது ஒரு கணத்தில்,
மனதின் ஒரு,
மூலையிலிருந்து,
சில  வரிகள்,
தோன்றும்..

அவற்றை
அவ்வப்போது எழுதிவிடுவது,
என் வழக்கம்..

அதை சிறந்த,
கவிதையாய் நினைத்து,
மகிழ்வதும் என்
வழக்கம்..

ஆனால்,
மற்றோர் பார்வையில்,
அது பிழையுள்ள கிறுக்கல்களாக,
தெரிவதை,
நான் உணர்ந்திருக்க வில்லை.

அவ்வப்போது,
கவிதை என்ற நினைப்பில்,
என் கிறுக்கல்களை,
இடையிடையே சில பக்கங்களில்,
"கிறுக்கல் துளிகள்"
என்று எழுதிட போகிறேன்..

பெரிய மனது,
கொண்டு,
என் கிறுக்கல் கவிதைகளை,
வாசித்து,
மன்னித்து விடுங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக