வெள்ளி, 25 ஜூலை, 2014

" உன்னை தொடர்கிறேன்"

உன்னை விரும்பி,
உன்னை தொடர்கிறேன்,
தினம்..

இந்த வினாடியில்,
இந்த உலகில்,
உன்னை மட்டுமே,
விரும்புகிறேன்..

*
அவளுக்கு என்னை பிடிக்கும்,
என்பதை நானறிவேன்..

அவள்,
நடிக்கிறாள் என்பதையும்,
நானறிவேன்..

**
மழையில்,
நனைய பிடிக்கிறது,
உனக்கு குடை பிடித்தபடி..

**
குளிர் தென்றல்,
சாமரம் வீச,
விஸ்தாரமான பச்சை புல்வெளி,
காதல் உணர்வுகளால்,
திளைக்கிறது,
நம் காதல் கணங்களில்..

**
உனக்காக காத்திருக்கையில்,
இந்த விஸ்தாரமான,
பச்சை புல்வெளியின்,
நிசப்தம் கூட,
காதல் பேசுகிறது,
என்னில்..

**
தூர தெரிந்த,
இரு விண்மீன்களில்,
நான் ஒன்றாய்,
நீ ஒன்றாய்,
கண்சிமிட்டும்,
நம் காதல் கனவுகள்,
இதம்.. பெண்ணே.

**
என் இதயம்,
என்பது,
உன் பிம்பம்,
சுமப்பது..

**
எத்தனை தொலைவில்,
நீ இருந்தாலும்,
என் உணர்வுகளில்,
நீ வெகு அருகாமையில்தான்,
இருக்கிறாய்.. எந்நேரமும்..

**
உன்னை பார்த்ததும்,
படபடக்கும்,
என் உணர்வுகளை,
காதல் என்றுதான்,
உணர்கிறேன்..

**
மெல்ல நீ,
விடை பெறுகையில்,
என் கனவுகள்,
தீர்ந்து,
விடியலும் துவங்கி விடுகிறது.

**
உன் மீது விழுந்து,
சிதறும்,
மழை துளிகளோடு,
நானும்,
பரவசமாய் சிதறுகிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக