புதன், 23 ஜூலை, 2014

மனதின் உள்ளிருந்து..

வாய் விட்டு சிரித்தது,
கடைசியாய் எப்போது,
என்று யோசித்தேன்..

ம்ஹூம்,
நினைவு சிறகுகளுக்குள்,
அகப்படவே இல்லை..

விழிகளில் நீர் கசிய,
வாய் விட்டு எப்போது,
சிரித்தேன் என்று,
தெரியவில்லை..

ஆனால்,
சமீப காலங்களில்,
மனம் விட்டு சிரித்ததை,
விட,
மனம் விட்டு துயரப்பட்டது,
அல்லது,
இறுக்கமாய் இருந்ததுதான்,
அதிகம்..

அதுவும் கடைசி,
ஆறேழு வருடங்களில்,
என் இறுக்கம்,
அதிகம்..

ஏனோ பால்ய வயதுகளின்,
சிரிப்பு பொழுதுகள்,
நினைவுக்கு வந்து,
செல்கிறது இப்போது..

காலம் வேகமாய் விரைய,
வயதும் கூடி செல்ல செல்ல,
ஆனந்த புன்னகை,
என்பது,
எட்டா உயரத்தில்தான்,
சென்று விடுகிறது..

மகிழ்வான தருணங்களில்,
கூட,
புன்னகை என்பதை,
நாகரீகம் என்ற பெயரில்,
மௌனமாய் வெளிப்படுத்தும்,
சூழலில் வேறு
இயங்கி கொண்டிருக்கிறோம்..

எதுவோ,
ஆனால் எங்கோ,
விரைந்து கொண்டிருக்கிறோம்..

முற்று புள்ளிக்கு,
மரணம் என்று பெயரிட்டும்,
வைத்திருக்கிறோம்..

சரி,
இறுதியாய் என்று,
வாய் விட்டு,
மனம் விட்டு புன்னகைத்தேன்,
என்று மீண்டும்,
நினைவு சிறகுகளுக்குள்,
செல்கிறேன்..

அகப்படவில்லை..
ஆனாலும்,
நான் சில கணங்களில்,
அல்லது,
சில பொழுதுகளில்,
மிக மகிழ்வாய்,
இயங்குகிறேன் என்று,
உணர்கிறேன்..

அந்த மகிழ்வான,
தருணங்கள்,
அந்த புன்னகை,
வினாடிகள்,
என் மழலை செல்வத்தோடு,
நான் இருக்கும்,
பொழுதுகள்தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக